தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டதிருத்த வரைவு மசோதாவை திரும்ப பெற கோரி 26ம் தேதி முதல் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சங்க பொதுக்குழு முடிவு

Advertisement

திருச்சி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவின் பொதுக்குழு கூட்டம், திருச்சி தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வக்கீல்கள் சட்டத்திருத்த வரைவு மசோதா-2025-ஐ ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் பிப்.26 முதல் மார்ச் 1 வரை வக்கீல்கள் கோர்ட் பணியில் இருந்து புறக்கணிப்பது என்றும், ஜனநாயக விரோத சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பபெற வேண்டும் என்று கோரியும், வெளிநாட்டு சட்ட நிறுவனங்களையோ வக்கீல்களையோ இந்தியாவில் எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி பிப்.26 அன்று அனைத்து கோர்ட் வாயில் முன்பாக கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வக்கீல்கள் சட்ட திருத்த வரைவிலுள்ள ஆட்சேபங்களை பிப்.28க்குள் தெரிவிக்க வேண்டும் என்று குறைந்த நாட்கள் அவகாசம் கொடுத்து சட்டத்தை அவசரகதியில் நிறைவேற்ற ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது.

ஒன்றிய அரசு இதை கைவிட்டு வக்கீல்களின் கோரிக்கையை ஏற்று, மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் பிப்.28 அன்று அனைத்து கோர்ட் வாயில் முன்பாக உண்ணாவிரதம் நடத்தப்படும். இந்த கோரிக்கை குறித்து பார் கவுன்சில் ஆப் இந்தியா சேர்மன் மன்னன் குமார் மிஸ்ராவையும் நேரில் சந்திப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக ஜாக் பொதுக்குழு அறிவித்துள்ள அனைத்து போராட்டங்களுக்கும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களும், அமைப்புகளும் மற்றும் வக்கீல்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் பங்கேற்றனர்.

 

Advertisement

Related News