தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முன் அனுமதியின்றி வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தால் சஸ்பெண்ட்: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: முன் அனுமதியின்றி நீதிமன்ற புறக்கணிப்பு செய்தால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்கக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜி.அருள்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள விதி விலக்குகள் தவிர்த்து பிற காரணங்களுக்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதாக இருந்தால் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி, மாவட்ட நீதிமன்றங்களில் முதன்மை மாவட்ட நீதிபதியிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

Advertisement

முன் அனுமதி பெறாமல் நீதிமன்ற புறக்கணிப்பில் நடத்தினால் அது சட்டவிரோத போராட்டமாக கருதப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து சட்டவிரோத நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், போராட்டத்துக்கு காரணமான வழக்கறிஞர்களை வழக்கறிஞர் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement