தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வழக்கு விசாரணையில் வெடித்த சிரிப்பலை: சுப்ரீம் கோர்ட்டில் ‘விஸ்கி’ பாட்டிலுடன் ஆஜரான வக்கீல்; இது என்ன ஜூஸ் பாக்கெட்டா..? என நீதிபதி கேள்வி

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வர்த்தக முத்திரை தொடர்பான வழக்கில், ஆதாரமாக விஸ்கி பாட்டில்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் விசாரணை கலகலப்பாக மாறியது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் அவரது சக நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு, இரண்டு விஸ்கி பிராண்டுகளுக்கு இடையேயான வர்த்தக முத்திரை தொடர்பான வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்களான முகுல் ரோத்தகி மற்றும் ஹரிஷ் சால்வே ஆகியோர் ஆஜராகினர்.

Advertisement

அப்போது, வழக்கின் முக்கிய ஆதாரமாக, சர்ச்சைக்குரிய இரண்டு நிறுவனங்களின் விஸ்கி பாட்டில்களையும், டெட்ரா பேக்குகளையும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்தப் பாட்டில்களைப் பார்த்த நீதிபதி சூர்யா காந்த், உடனடியாக நகைச்சுவையாக, ‘வெளியே இருக்கும் லேபிள்கள் ஒரே மாதிரியாக இருப்பதைப்போல், உள்ளே இருக்கும் சரக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, சிறிய டெட்ரா பேக்குகளை ரோத்தகி காண்பித்தபோது, அதைப் பார்த்து ஆச்சரியமடைந்த நீதிபதி, ‘இது என்ன ஜூஸ் பாக்கெட் போல உள்ளதே! இதை மாணவர்கள் பள்ளிக்குக் கூட எளிதாக எடுத்துச் சென்று விடுவார்கள்’ என்று கிண்டலடித்தார்.

இறுதியாக, மற்றொரு மூத்த வழக்கறிஞரான ஹரிஷ் சால்வேவைப் பார்த்து, ‘உங்கள் நேரத்தைப் பற்றி எங்களுக்குக் கவலை ஏற்படுகிறது’ என்று கூறி, இந்த விஸ்கி பாட்டில்களைப் பார்க்கும் நேரம் இதுவல்ல என்பதுபோலவும் அவர் ஜாடைமாடையாகக் குறிப்பிட்டபோது, நீதிமன்ற அறை முழுவதும் சிரிப்பலையால் அதிர்ந்தது.மிக முக்கிய வாதங்கள் நடைபெறும் உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த நகைச்சுவையான சம்பவம், வழக்கின் இறுக்கமான சூழலை தளர்த்தி அனைவரையும் சிரிக்க வைத்தது.

Advertisement

Related News