தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவள்ளூர் கலெக்டர் தலைமையில் சட்டம், ஒழுங்கு ஆலோசனை கூட்டம்

Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆய்வு கூட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம், போதை பொருட்கள் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்பு குழு ஆய்வுக் கூட்டம், காவல் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை வகித்தார். காவல் கண்காணிப்பாளர் ரா.நிவாச பெருமாள், ஆவடி துணை காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் காவல் துறையினர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடையின் மீது நடவடிக்கை மேற்கொண்டு கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் நன்றாக பயன்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்தும் ஆய்வு கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு உறுப்பினர்களிடம் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர். இதில் பொன்னேரி சப் கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, கோட்டாட்சியர்கள் (திருவள்ளூர்) கற்பகம், (திருத்தணி) தீபா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Advertisement