தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்.. ஆயிரம் விளக்கு பகுதியில் BNS சட்டம் 304(2) என்ற பிரிவின் கீழ் முதல் வழக்கு!!

சென்னை :ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு 164 ஆண்டுகளாக நடைமுறையில் நேற்று வரை இருந்து வந்த இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரச் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியுள்ளது. எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், மேற்கண்ட 3 புதிய சட்டங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
Advertisement

இந்த நிலையில், ஒன்றிய அரசு கொண்டுவந்த புதிய குற்றவியல் சட்டங்கள் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் முதல் வழக்குப்பதியப்பட்டுள்ளது. அப்தாப் அலி என்பவரிடமிருந்து பைக்கில் வந்த 2 பேர் மொபைல் போனை பறித்துச் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக இன்று அமலுக்கு வந்துள்ள BNS சட்டம் 304(2) என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இதனிடையே 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலால் தமிழ்நாட்டில் ஏற்கனவே அச்சிட்ட எப்.ஐ.ஆர்களில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. IPC, Cr.P.c அச்சிட்ட பிரிவுகள் அடிக்கப்பட்டு BNSS என புதிய சட்டத்தின் பிரிவுகள் எழுதப்பட்டு வருகின்றன.

மேலும் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் பின்வருமாறு..

*காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு மாதம் பயிற்சி அளித்து புதிய சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

*புதிய சட்டத்தின் அடிப்படையிலான முதல் தகவல் அறிக்கை புத்தகங்களை அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளும் தலைமை அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

*பழைய FIR புத்தகத்தில் புதிய சட்டத்தின் பெயரை அந்தந்த மாவட்ட காவல் அதிகாரிகளே திருத்திக் கொள்ளலாம்.

*இன்று முதல் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றங்களுக்கு மட்டுமே புதிய சட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

*ஜூலை 1க்கு முன்பான குற்றங்கள் தொடர்பான FIR-ல் பழைய சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிய வேண்டும்.

*இன்று முதல் புதிய சட்டத்தின்படி பதிந்த வழக்குகள் குறித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News