தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் சென்னை உட்பட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.