தவெக வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சிவாவுக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி வழங்கி அரசு உத்தரவு
சென்னை: தவெக வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சிவாவுக்கு வீட்டு வசதி வாரிய தலைவர் பதவி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. நியமனத்துக்கான அரசாணையை முதல்வர் விஜயிடம் காண்பித்து வி.சிவா வாழ்த்து பெற்றார். ...
சிங்கப்பூரில் வைரத்தை திருடி வசமாக சிக்கிய 2 இந்தியர்கள்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சைனாடவுன் நகைக்கடையில், போலி வைரத்தை வைத்து, 4.95 கேரட் அசல் வைரத்தை திருடியதாக 2 இந்திய சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா தப்பிச் செல்ல முயன்ற இருவரும் விமான நிலையத்தில் பிடிபட்ட நிலையில், ஒருவருக்கு 2 ஆண்டு 2 மாதம் சிறைத் தண்டனை, மற்றொருவரின் வழக்கு விசாரணையில் உள்ளது. ...
பார்களில் புகையிலை, சிகரெட் விற்கத் தடை விதிப்பு!
டாஸ்மாக் மதுக்கடை பார்களில் புகையிலைப் பொருட்கள், பீடி, சிகரெட் விற்கக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் தடை வித்துள்ளது. பார்களில் விற்கப்படும் குடிநீர், குளிர்பானங்கள் தரச்சான்று பெற்றதாக இருக்க வேண்டும், மதுபான பார்களில் மது பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது, கூடுதல் விலைகளில் நொறுக்கு தீனிகளை விற்ககூடாது என்று சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
மதுரை அருகே கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை
மதுரை: செல்லூர் அருகே கீழ் அண்ணாதோப்பு பகுதியில் கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை செய்துள்ளார். தனது மகள் திருமணத்துக்காக கலை என்பவரிடம் 2021ல் பிரேமா ரூ.2லட்சம் கடன் வாங்கியுள்ளார். ரூ.2 லட்சத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய நிலையில் மேலும் வட்டி கேட்டு கலை என்பவர் தொந்தரவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ...
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் ஒன்றிய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
டெல்லி: ஒன்றிய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சமரசத்துக்கு இடமில்லை, பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். ஒன்றிய அமைச்சர்களின் சமரச பேச்சை ஏற்க மறுத்து ராகுல் காந்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ...
தெரு நாய் பிரச்சனையில் எடுத்த நடவடிக்கை என்ன.! அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு 1 வாரம் அவகாசம்
சென்னை: தெரு நாய் பிரச்சனையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. தெருநாய்க்கடி சம்பவங்கள் நாள்தோறும் நடக்கின்றன; பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். தெருநாய் பிரச்சனையை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ...
சென்னை விமான நிலையத்தில் 4.5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப் பொருள் பறிமுதல்: 2 பேர் கைது
சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்பிலான 4.5 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப் பொருள் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் இருந்து சுற்றுலா சென்ற 2 இளைஞர்கள், சென்னை திரும்பும்போது போதைப்பொருளை உணவுப்பொருட்களில் பதப்படுத்திக் கொண்டுவந்துள்ளனர். ...
வழக்குகள், கைதுக்கு திமுக அஞ்சாது - கனிமொழி எம்.பி
சென்னை: நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் உள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை சந்தித்த கனிமொழி பேட்டி அளித்துள்ளார். வழக்குகள், கைதுக்கு திமுக அஞ்சாது என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார். தமிழ்நாட்டின் உரிமைக்கு எல்லா கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும். மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது பாஜக என்று அவர் தெரிவித்துள்ளார். ...
பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது
டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீஸ் கைது செய்தது. பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி கைகளில் விலங்கிட்டு காங்கிரசார் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லம் நோக்கி பேரணி செல்ல முயன்ற காங்கிரசார் கைது செய்யப்பட்டார். நீட் முறைகேட்டுக்கு பொறுப்பேற்று பிரதமர்...