மாநில கல்வி கொள்கையை நாளை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: மாநில கல்வி கொள்கையை நாளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடவுள்ளார். மாநில கல்வி கொள்கையை உருவாக்க 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வரிடம், கடந்த ஆண்டு ஜீலை மாதம் சமர்ப்பித்தது. 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கையையே கடைபிடிக்க வேண்டும் என மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரை வழங்கியுள்ளது.