பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு
பெங்களூரு: பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது. ஹசன் தொகுதி எம்.பி.யாக இருந்தபோது பல பெண்களை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததும் அம்பலமாகியுள்ளது. தனது வீட்டில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரஜ்வல் கைது செய்யப்பட்டார். வெளிநாடு தப்பிய பிரஜ்வல் ஜெர்மனியில் இருந்து பெங்களூரு வந்தபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் வழக்கை அடுத்து மஜத கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா இடை நீக்கம் செய்யப்பட்டார்.