தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆன்லைன் மூலம் ₹21 லட்சம் மோசடி : போலீஸ் விசாரணை

உடுப்பி : அதிக வருவாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, ஆன்லைன் மூலம் ₹21 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.உடுப்பி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், செல்போன் மூலம் விழிப்புணர்வை மேற்கொண்டாலும் தினமும் மோசடியில் சிக்குபவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டு செல்கிறது. இந்நிலையில் உடுப்பி டவுன் குற்றப்பிரிவு போலீசில் உடுப்பியை சேர்ந்த பாப்பீட்டர் மோரிங் லோபோ என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது செல்போன் எண்ணை வாட்ஸ் அப் குழுவில் இணைத்த மர்ம நபர்கள், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைப்பதாக நம்ப வைத்தனர். அதன்பேரில், சுமார் ₹21,39,903 தொகையை அனுப்பினேன். ஆனால், அவர்கள் கூறியபடி எனக்கு லாபத்தை தராமல் ஏமாற்றி விட்டனர் என கூறியுள்ளார்.