ஆணவப் படுகொலை வழக்கில் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது: ஐகோர்ட் கிளை
மதுரை: ஆணவப் படுகொலை வழக்கில் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. கவின் ஆணவ படுகொலை வழக்கை நீதிபதி கண்காணிப்பில் நடத்த உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணை முறையாக நடைபெறுவதால் மேற்கொண்டு எந்த விசாரணையும் தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சிபிசிஐடி 8 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.