கடலூர் கல்லூரி மாணவர் மரணத்தில் ஆணவக் கொலை என்ற சந்தேகம் உள்ளதால் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு!!
சென்னை : கடலூர் கல்லூரி மாணவர் மரணத்தில் ஆணவக் கொலை என்ற சந்தேகம் உள்ளதால் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர் ஜெய சூர்யாவின் தந்தை எம்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது, வணக்கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளியில் வருவதில்லை என நீதிபதி பி.வேல்முருகன் வேதனை தெரிவித்தார்.