சென்னை: ஆவடியில் CRPF காவலரின் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சக காவலரான சுரேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். CRPF உயரதிகாரிகளிடம் புகாரளித்தும் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டியுள்ளனர். கராத்தே தெரிந்த அச்சிறுமி சுரேஷ் குமாரை தாக்கி விட்டு, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். புகாரை அடுத்து CRPF வளாகத்திற்குச் சென்ற ஆவடி போலீசார், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.