தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடந்த மாதம் டிக்கெட் சோதனையில் ரூ.6.25 கோடி வருவாய்: தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல்

சென்னை: கடந்த மாத பயணச்சீட்டு சோதனையில் ரூ.6.25 கோடி வருவாய் ஈட்டி சென்னை கோட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கோட்டம் தனது ரயில் சேவைகளில் பாதுகாப்பான, சுமுகமான மற்றும் பயணிகளுக்கு உகந்த பயண அனுபவத்தை உறுதி செய்வதோடு, பயணச்சீட்டு சோதனை வருவாயில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங் தலைமையில் கடந்த செப்.30ம் தேதி சிறப்பு பயணச்சீட்டு சோதனை நடந்தது.

Advertisement

அப்போது, முறையற்ற பயணம் மேற்கொண்ட 3,254 வழக்குகள் கண்டறியப்பட்டு, மொத்தமாக ரூ.18.22 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் கடந்த மாதம் மட்டும் 1,21,189 வழக்குகளிலிருந்து ரூ.6.25 கோடியை வசூலித்து, தனது மாதாந்திர பயணச்சீட்டு சோதனை வருவாயில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது ஒரே மாதத்தில் ஈட்டப்பட்ட அதிகபட்ச வருவாய்க்கான புதிய சாதனையாகும். இதுமட்டுமின்றி, புறநகர், மெயில்/எக்ஸ்பிரஸ், பயணிகள் மற்றும் சிறப்பு ரயில்களில் நடத்தப்பட்ட வழக்கமான பயணச்சீட்டு சோதனைகள், விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் முன்கூட்டிய நடவடிக்கைகள் காரணமாக, கடந்த ஆண்டை விட பயணச்சீட்டுடன் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, அனைத்து பயணிகளும் தகுந்த பயணச்சீட்டுகள் அல்லது பாஸ்களுடன் பயணம் செய்யுமாறு சென்னை கோட்டம் கேட்டுக்கொள்கிறது.

Advertisement

Related News