தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அருமனையில் பரபரப்பு; நெடுங்குளத்தின் கரையோரத்தில் மண் சரியும் அபாயம்: குடியிருப்பு வாசிகள் வெளியேற அறிவுறுத்தல்

Advertisement

அருமனை: அருமனை அருகே பரந்து விரிந்த நெடுங்குளம் உள்ளது. இந்த குளத்தில் நீர் தேங்கும்போது அப்பகுதி மக்கள் குளித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெடுங்குளத்தை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நெடுங்குளத்தை தூர்வாரும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே குளத்தில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி தினந்தோறும் ஏராளமான லாரிகள் மூலம் நெடுங்குளத்தில் வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சில லாரிகள் குளத்தில் அளவுக்கு அதிகமாகவும், ஆழமாக தோண்டி மண் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததால் குளத்தின் கரையோர பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குளத்தின் கரையில் உள்ள அடுக்குமாடி வீடுகள் நிலச்சரிவில் சிக்கி இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் மண் உறுதிதன்மையற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நெடுங்குளத்தின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று விளவங்கோடு தாசில்தார் மற்றும் குலசேகரம் தீயணைப்பு படை வீரர்கள் நெடுங்குளத்துக்கு சென்று மண் சரியும் அபாயம் உள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுப்பணித்துறையினர் வந்து குளத்தில் மண் உறுதிதன்மை குறித்து ஆராய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கையாக நெடுங்குளத்துக்கு அருகே அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க குளத்தின் அருகே நீர்நிலை பகுதியில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கியது குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மண் சரிவால் வீடுகளுக்கு ஆபத்து வரும் என தெரிந்த பின்னரும் நீர்நிலைகளில் வீடு கட்ட அனுமதி அளித்தவர்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement

Related News