தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏற்காடு குப்பனூரில் மண்சரிவு 4,000 மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணி

*எம்எல்ஏ ஆய்வு

Advertisement

ஏற்காடு : ஏற்காடு அருகே குப்பனூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் 4,000 மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. இதனை சித்ரா எம்எல்ஏ ஆய்வு செய்தார்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவியது. கடும் குளிரால் உள்ளூர் மக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், குப்பனூர் மலைப்பாதையில், கொட்டச்சேடு கிராமம் அருகே நேற்று சாலை தடுப்பு மழையில் ஊறிய நிலையில் திடீரென்று சரிந்து விழுந்தது.

தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில், 4,000 மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், குப்பனூர் மலைப்பாதையில் பைக் மற்றும் உள்ளூர்வாசிகளின் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மண் சரிவு ஏற்பட்ட இடத்தில், மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணிகள் நடந்த வந்த போது, ஏற்காடு எம்எல்ஏ சித்ரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement