தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.24 கோடி நிலம் மீட்பு

திருவொற்றியூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், வெள்ளிவாயல் 2 வேப்பங்கொண்டா ரெட்டிபாளையம் கிராமத்தில் திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலுக்கு சொந்தமான 10.95 ஏக்கர் விவசாய நிலத்தை ராமநாத ரெட்டியார், கிருஷ்ணன் மற்றும் தசரதன் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். குத்தகை காலம் கடந்த 2004ம் ஆண்டு முடிவடைந்த பிறகும் நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் தொடர்ந்து அனுபவத்தில் வைத்திருந்தனர். மேலும் கோயில் நிர்வாகம், உரிமை கோராமல் இருக்க 2009ம் ஆண்டு பொன்னேரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், ஆக்கிரமிப்புதாரர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Advertisement

அந்த வழக்கில், கடந்த 2019ம் ஆண்டு 10.95 ஏக்கர் நிலம், கோயிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பானது. ஆனால் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் சம்பந்தப்பட்ட தனியார் கோயில் நிர்வாகத்துக்கு தெரியாமல் அனுபவத்தில் வைத்திருந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தியாகராஜ சுவாமி கோயில் உதவி கமிஷனர் நற்சோணை தலைமையில், ஆய்வாளர் அறிவுச்செல்வி, தனி வட்டாட்சியர் சத்யேந்திரராஜ் மற்றும் கோயில்பணியாளர்கள் சந்தானம், சுபா தேவி ஆகியோர் சென்று கிராம மக்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த ரூ.24 கோடி மதிப்பிலான 10.95 ஏக்கர் கோயில் நிலத்தை மீட்டனர். பின்னர் இது கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலம் என்று அறிவிப்பு பலகை வைத்தனர்.

Advertisement

Related News