தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தடாகம் அருகே யானை தாக்கி நடைபயிற்சிக்கு சென்றவர் பலி: வனத்துறையை கண்டித்து மக்கள் சாலைமறியல்

Advertisement

கோவை: கோவை தடாகம் அடுத்த தாலியூர் அருகே யானை தாக்கியதில் நடைபயிற்சிக்கு சென்ற முதியவர் உயிரிழந்தார். வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை தடாகம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகே உள்ள கிராமங்களில் உலாவி வருகிறது. இதனை கண்காணிக்க வனத்துறை சார்பில் ஆல்ஃபா என்ற ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 5 மணியளவில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறி இருக்கிறது. அதே நேரத்தில் தாலியூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளரான நடராஜன் என்பவர் வழக்கம்போல 5.30 மணியளவில் தாலியூர் சாலையில் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை தாக்கியதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, தகவலறிந்து வனத்துறையினர் மற்றும் தடாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர். ஆனால் அதனை தடுத்து நிறுத்திய நடராஜனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் தாலியூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News