தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லடாக் காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கைது!

லடாக்: லடாக் காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளார். சோனம் வாங்சுக் விரைவில் லடாக்கிலிருந்து வெளியேற்றி, வேறு மாநில சிறையில் அடைக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

லடாக் யூனியன் பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிக்க கேட்டு ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை கடந்த 4 மாதமாக கிடப்பில் போடப்பட்டதால் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் செப்.10 ஆம் தேதி உண்ணாவிரதம் இருந்தார்.

அந்த உண்ணாவிரதத்தில் இருந்த 2 பேர் மயக்கம் அடைந்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது அவர்கள் பேரணியாக சென்ற போது பயங்கர வன்முறை வெடித்தது.

பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர். பா.ஜ அலுவலகம், பாதுகாப்பு வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கண்ணீர்குண்டு வீசப்பட்டது. தடியடி நடத்தப்பட்டது. இதில் 4 பேர் பலியானார்கள். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் லடாக்கில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் எனக் கூறி, போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பிற்பகல் 2:30 மணிக்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

சோனம் வாங்சுக் விரைவில் லடாக்கிலிருந்து வெளியேற்றி, வேறு மாநில சிறையில் அடைக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டத்தில் வாங்சுக் வன்முறையை தூண்டிவிட்டதாக உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement

Related News