தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லடாக் மக்களின் துயரமும் வேதனையும் பிரதமர் மோடியின் மனசாட்சியை எழுப்ப வேண்டும் : ராகுல் காந்தி கருத்து

டெல்லி : லடாக் மக்களின் துயரமும் வேதனையும் பிரதமர் மோடியின் மனசாட்சியை எழுப்ப வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், "6 ஆண்டுகளுக்கு முன், லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டபோது லடாக் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர். ஆனால், மிகப்பெரிய ஏமாற்றம் லடாக் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. லடாக் மக்களின் நிலம் மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. உள்ளூர் நிர்வாகம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் துணை ஆளுநர் மற்றும் அதிகாரத்துவத்தால் கையகப்படுத்தப் பட்டுள்ளது.

Advertisement

அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கான நியாயமான கோரிக்கைகள்  நிறைவேற்றப்படவில்லை. சீனா ஒருதலைப்பட்சமாக உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள நிலையை ரத்து செய்ததாலும் ஜூன் 19, 2020 அன்று சீனாவிற்கு, பிரதமர் நற்பெயரை வழங்கியதாலும் லடாக்கில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது. லடாக் இந்தியாவிற்கு கலாச்சார, பொருளாதார, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. லடாக் மக்கள் எல்லா நேரங்களிலும், தங்கள் மையத்தில் பெருமைமிக்க இந்தியர்களாக இருந்துள்ளனர். லடாக் மக்களின் துயரமும் வேதனையும் ஒன்றிய அரசின் மனசாட்சியை எழுப்ப வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகள் மிக விரைவில் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News