தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

லடாக்கில் ஹோப் அனலாக் ஆய்வு மையம்: ஆகஸ்ட் 1 முதல் 10 வரை 2 பேர் தங்கி ஆய்வு

லடாக்: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோட்டமாக லடாக்கில் ஹோப் எனப்படும் கோள்கள் ஆய்வுக்கான இமயமலை மையம் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. ஹோப் திட்டத்துக்காக கடல் மட்டத்தில் இருந்து 4,530 மீட்டர் உயரத்தில் உள்ள லடாக்கில் சோ கர் பள்ளத்தாக்கில் அனலாக் மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. வேற்றுக்கோள்களின் இருக்கும் சுழலை ஒரு கலனில் உருவாக்கி அங்கு தங்கியிருந்து ஆய்வு செய்வதையே அனலாக் ஆய்வு என்கிறார்கள். குறைந்த காற்றழுத்தம், உப்புத்தன்மை கொண்ட நிரந்தர பனித்தளம், அதிக குளிர், அதிக புற ஊதாக் கதிர்களின் தாக்கம் என செவ்வாய் கோளின் தொடக்க கால சூழல் நிலவுவதாலேயே ஹெசோபர் பள்ளத்தாக்கில் ஆய்வு மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இங்க ஆகஸ்ட் 1 முதல் 10 ஆம் தேதி வரை 2 பேர் தங்கி இருந்து ஆய்வு மேற்கொள்ளுவர்கள். ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு இரண்டு கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. 26 அடி விட்டம் கொண்ட கலன் தங்குவதற்காகவும், 16 அடி விட்டம் கொண்ட கலன் ஆய்வுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. நீர் மூலம் தாவரங்களை வளர்ப்பது, சமையல், கழிவறை என அனைத்து வசதிகள் கொண்ட இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் உடல் மற்றும் உடற்செயலில் செயல்பாடுகள், குறைந்த ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றால் என்ன தாக்கம் ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்வார்கள். செவ்வாய் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கான முக்கிய மைக் கல் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

Related News