தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசுத்துறைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளருக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயம்: இடது தொழிற்சங்க மையம் வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் அனைத் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இடது தொழிற்சங்க மையத்தின் மாநில துணை தலைவர் ஏ.கோபால் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் அனைத்து மாவட்ட அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஊதியம் நிர்ணயம் செய்வது வழக்கம்.
Advertisement

எனினும், இதுவரை அவர்களுக்கு தினக்கூலி ஊதியம் நிர்ணயம் செய்யப்படவில்லை.மேலும், அனைத்து அரசு துறைகளிலும் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் தினக்கூலி தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயத்துடன் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக, வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் 192 தினக்கூலி தொழிலாளர்களின் முதுநிலை பட்டியல் வெளியிட்டு, அவர்களில் 86 தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கருத்துரு அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, வண்டலூர் உயிரியல் பூங்காவில் 86 தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும், பிற அரசு துறைகளில் நீண்ட காலமாக வேலைபார்க்கும் 1000க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு நிரந்தர ஊதிய நிர்ணயம் செய்வதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Related News