தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் எஸ்.ஐ.ஆர். பணிகளை கைவிட வேண்டும்: சிஐடியு மாநில மாநாட்டில் தீர்மானம்

கோவை: கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சிஐடியு தொழிற்சங்கத்தின் 16-வது மாநில மாநாடு நேற்று (வியாழன்) தொடங்கியது. வருகிற 9ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, மாநாட்டு ஸ்தூபிக்கு மலர்தூவி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமை தாங்கி பேசினார். அகில இந்திய பொதுச்செயலாளர் தபன்சென் தொடக்க உரை நிகழ்த்தினார்.

Advertisement

பின்னர் தொமுச அகில இந்தியத் தலைவர் கி.நடராஜன், ஏடியூசி மாநில பொதுச்செயலாளர் ம.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு எச்.எம்.எஸ் மாநில செயலாளர் டி.எஸ்.ராஜாமணி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த மாநாட்டில் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், பாஜவின் அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாடு குறித்து மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன், நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து தொழிற்சாலைகளிலும், தொழிலாளர்களை நிரந்தரமற்றவர்களாக்க வேண்டும், தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு இருக்கக் கூடாது தொழிற்சங்கங்கள் இருக்கக்கூடாது என்பதுதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதனை நிறைவேற்றுவதற்கு அனைத்து நாட்டு அரசுகளும் முயற்சிக்கின்றன. இந்தியாவிலும் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் கடுமையாக அதற்கு முயற்சிக்கிறது. சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் கைவிடப்பட வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். அதை எதிர்த்து செயல்பட்டுக் கொண்டிருக்க கூடிய அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகளுடன் இணைந்து வலுவாக போராடுவது என்று தீர்மானித்துள்ளோம்’’ இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News