கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
Advertisement
கடந்த சில மாதங்களாக நெஞ்சு வலியால் சிரமப்பட்டு வந்த சந்திரசேகர், கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதற்கிடையே அறுவை சிகிச்சை செய்து, வலி தாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று விட்டில் யாரும் இல்லாதபோது சந்திரசேகர் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சென்ற சோமங்கலம் போலீசார், சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement