தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பலாத்காரம்: லேப் டெக்னீசியன் போக்சோவில் கைது

திருமலை: தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீசியனை போக்சோவில் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை அவரது பெற்றோர் கடந்த 6ம்தேதி கரீம்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளம்பெண் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு நேற்று அம்மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் வந்தார். அவர் பெண்ணுக்கு ஊசி போட வேண்டும். அனைவரும் வெளியே காத்திருங்கள் எனக்கூறியுள்ளார். அதன்படி பெண்ணின் பெற்றோர் அறைக்கு வெளியே சென்று காத்திருந்தனர்.

Advertisement

அப்போது அந்த நபர், அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை துணியால் மறைத்துள்ளார். அதன்பிறகு இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டுள்ளார். மயங்கிய அப்பெண்ணை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அறையில் இருந்து அவர் வெளியே சென்றவுடன் இளம்பெண்ணின் பெற்றோர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தங்களது மகள் மயங்கிய நிலையில் அலங்கோலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் தற்போது வந்து சென்றவர் யார் என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர் அம்மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரியும் மகாராஷ்டிராவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (23) என்பதும், அவர் மதுபோதையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த செல்போனை சோதனை செய்தபோது அதில் ஆபாச படங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News