தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடப்பாண்டு குறுவை பருவத்தில் 3.92 லட்சம் மெட்ரிக் டன் நெல் கூடுதலாக கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பருத்தியப்பர் கோயிலில் உள்ள திறந்த வெளி நெல் சேமிப்பு மையம், திருவையாறு அருகே விளாங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டை பொறுத்தவரை குறுவை நெல் கொள்முதல் செப்டம்பர் 1ம் தேதி துவங்கப்பட்டது.

Advertisement

தமிழகத்தில் டெல்டா மாவட்ட குறுவை நெல் சாகுபடி பரப்பளவு 6.31 லட்சம் ஏக்கராக அதிகரித்ததன் காரணமாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும் ஹெக்டேருக்கு 6 மெட்ரிக் டன் அளவில் நெல் உற்பத்தியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 1,728 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த 8ம் தேதி வரை 7.02 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 97,125 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு ரூ.1606.65 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டில், இதே தேதியில் தமிழ்நாட்டில் 979 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3.10 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 44,913 விவசாயிகளுக்கு ரூ.755 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக 52,212 விவசாயிகளிடம் 3.92 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களிலிருந்து தினசரி 35000 மெட்ரிக் டன் நெல் வெளி மாவட்டங்களுக்கும், கிடங்குகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

Advertisement