தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குருமலை காட்டில் நாய்களை வைத்து முயல் வேட்டையாடிய 5 பேர் கைது

*சொகுசு கார், லோடு ஆட்டோ பறிமுதல்
Advertisement

கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே உள்ள குருமலை காட்டில் வேட்டை நாய்கள் மூலம் முயல் வேட்டையாடப்படுவதாக கோவில்பட்டி வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இவரது ஆலோசனையின்பேரில் வனக்காப்பாளர் பேச்சிமுத்து, வனவர்கள் கேசவன், பிரசன்னா, பாலமுருகன், வனக்காவலர் ராமசாமி ஆகியோர் குருமலை காட்டுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சொகுசு கார் மற்றும் லோடு ஆட்டோவில் வந்த சிலர், நாய்களை வைத்து முயல்களை வேட்டையாடுவது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள், கோவில்பட்டி அருகே துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள் (65), முத்துக்குமார் (44), கட்டபொம்மன் (32), மணிகண்டன் (41), முத்துகணேசன் மகன் கார்த்திகேயன் (30) என்பதும், சொகுசு கார் மற்றும் லோடு ஆட்டோவில் நாய்களுடன் வந்து முயல்களை வேட்டையாடுவதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த வனத்துறையினர், சொகுசு கார், லோடு ஆட்டோ மற்றும் 5 நாய்கள், 6 இறந்த முயல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் பெருமாள் உள்பட 5 பேரையும் கோவில்பட்டி ஜேஎம் 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட 6 முயல்களின் உடல்கள் கால்நடை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு பரிசோதனைக்கு பின்னர் குழிதோண்டி புதைக்கப்பட்டன.

Advertisement