தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னூரில் அதிக ஊக்க மருந்து எடுத்த இளைஞர் உயிரிழந்த விவகாரம் : உடற்பயிற்சி கூட உரிமையாளர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு

நீலகிரி : குன்னூரில் அதிக ஊக்க மருந்து எடுத்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றியது போலீஸ். தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றி உடற்பயிற்சி நிலைய உரிமையாளரை தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. இவர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். குன்னூரில் உடற்பயிற்சி நிலையத்தில் ஊக்க மருந்து எடுத்ததால் ராஜேஷ் கண்ணாவுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில் தீ வைத்து கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தற்கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், ராஜேஷ் கண்ணாவின் பெற்றோர் தனது மகன் உயிரிழப்புக்கு காரணமான உடற்பயிற்சி கூட உரிமையாளரான சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர். இதையடுத்து ராஜேஷ் கண்ணாவின் தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டுதல் வழக்காக மாற்றி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தலைமறைவான தனியார் உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் சிவகுமாருக்கு தனிப்படை போலீஸ் வலை வீசி வருகிறது.

Advertisement

Related News