தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்றத்தூர் அருகே சாலையோரம் பழுதாகி நின்ற டிராக்டர் மீது அரசு பஸ் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது: அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே சாலையோரம் பழுதாகி நின்ற டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். தாம்பரத்தில் இருந்து ஆவடி நோக்கி இன்று காலை 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்தை தணிகைவேலன் என்பவர் ஓட்டி சென்றார். குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் வந்தபோது, சாலையோரம் பழுதாகி நின்ற தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் மீது அரசு பேருந்து மோதியது.

Advertisement

இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மழைநீர் கால்வாய் மீது ஏறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்தின் முன்பகுதி சேதமானது. அரசுப் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறிகொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். விபத்தில் அதிர்ஷ்ட வசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்துப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராட்சத கிரேன் மூலம் கவிழ்ந்து கிடந்த அரசு பேருந்தை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விதிமுறைகளை மீறி சர்வீஸ் சாலைகளில் கண்டபடி வாகனங்களை நிறுத்துவதால் விபத்து நடக்கிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement