தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து பணம் உதிரிபாகங்கள் கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு சாலையில் உள்ள வணிக வளாகத்தில், சரண்யா நகரை சேர்ந்த நவீன் (28) கூல்ட்ரிங்க்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே பஜார் பகுதியை சேர்ந்த குமார் (48), செல்போன் கடை நடத்தி வருகிறார். 3வதாக ராஜகோபால் (56) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து 3 பேரும் கடைகளைப் பூட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
Advertisement

இன்று காலை ரெட்டம்பேடு சாலையில் நடைபயிற்சி சென்ற பலர், அங்குள்ள நவீன், குமார், ராஜகோபால் ஆகிய 3 பேரின் கடைகள் உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் 3 கடைகளின் உரிமையாளர்களை வரவழைத்தனர். போலீசார் நடத்திய சோதனையில் குமாரின் கடையில் இருந்த ₹10 ஆயிரம் மதிப்பிலான செல்போன் உதிரிபாகங்கள், நவீனின் கூல்ட்ரிங்க்ஸ் கடையில் இருந்த 8 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும், ராஜகோபால் மளிகை கடையை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். 3 மளிகைக் கடைகளை உடைத்து 2 மர்ம நபர்கள் புகுந்த காட்சிகளை வைத்து, அவர்கள் இருவரையும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement