தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்பகோணம் அருகே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி வயலுக்குள் பாய்ந்தது

கும்பகோணம் : கும்பகோணம் அருகே பாபநாசம் பகுதியில் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கொள்ளிடக்கரை வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பாபநாசம் தாலுகா வாழ்க்கை கிராமத்தில், கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் கூட்டு குடிநீர் திட்ட தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த நிலையில் சுவர் அமைக்கும் பணிக்கு தேவையான சிமெண்ட் கலவையை தஞ்சாவூரில் இருந்து வாழ்க்கை கிராமத்தின் வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கரையோரம் கலவை இயந்திர லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது, சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஒதுங்கிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கரையோரம் இருந்த வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரி ஓட்டுநர் ஆரோக்கியராஜ் (45) படுகாயங்களுடன் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், வயலில் கவிழ்ந்த சிமெண்ட் கலவை லாரியை கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இது குறித்து கபிஸ்தலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News