தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்பக்கரை அருவிக்கு போகலாம் ரைட்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

பெரியகுளம்: நீர்வரத்து சீரானதையடுத்து கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப்பயணிகளுக்கு நேற்று வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கிமீ தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளக்கெவி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும்போது அருவிக்கு நீர்வரத்து ஏற்படும்.
Advertisement

கடந்த வாரத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த 20ம் தேதி முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தனர். இதையடுத்து விட்டுவிட்டு மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில், கடந்த 3 தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு முற்றிலும் இல்லாத நிலையில், அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து தற்போது நீர்வரத்து சீரடைந்துள்ளது. இதையடுத்து 8 நாட்களுக்கு பின் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் நேற்று அனுமதி அளித்தனர். இதனால் அங்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Advertisement

Related News