தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குமரி கடலில் ஒதுங்கிய கன்டெய்னர் மீட்பு

Advertisement

குளச்சல்: கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்ட எல்சா 3 என்ற சரக்கு கப்பல் 640 கன்டெய்னர்களுடன் கடலில் மூழ்கியது. இவ்வாறு மூழ்கிய கன்டெய்னர்கள் தற்போது கரை ஒதுங்கி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் குமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடியில் கன்டெய்னர் ஒன்று கரை ஒதுங்கியது. அதை கடலில் இருந்து மீட்பதற்காக குஜராத்தில் இருந்து மரைன் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் சென்டரை சேர்ந்த அலுவலர்கள் 4 பேர், கடலோர பாதுகாப்பு படையினர் 8 பேர் வாணியக்குடி வந்தனர்.

அவர்கள் நேற்று முன்தினம் காலை வாணியக்குடிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராட்சத இயந்திரம் கொண்டு வரப்பட்டு அதில் கயிறு கட்டி, கன்டெய்னரை தூக்கும் பணி நடந்தது. நேற்று 2வது நாளாக மீட்பு பணி நடந்தது. மதியம் கன்டெய்னர் கரைக்கு கொண்டு வரப்பட்டது. அது தூத்துக்குடியில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு லாரியில் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement