தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குமரியில் படகு பயணம் ஆன்லைனில் டிக்கெட்: மென்பொருள் தயாராகிறது

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மற்றும் கண்ணாடி இழை பாலத்தை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இதற்காக படகு போக்குவரத்தினை நடத்தி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து குவிவதால் படகு பயணத்திற்கு டிக்கெட் எடுக்க நீண்ட வரிசை காணப்படுகிறது. சில சமயங்களில் 2 முதல் 5 மணி நேரம் வரை வரிசையில் காத்து நிற்க வேண்டியுள்ளது. இதனால் முதியோர் குழந்தைகள் மாணவ மாணவியர்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. இது குறித்து நேற்று கன்னியாகுமரி வந்த மாவட்ட கலெக்டர் அழகு மீனா கூறுகையில், படகுதுறையில் கூட்ட நெரிசல் பிரச்னையை தீர்ப்பதற்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகிக்க தமிழ்நாடு தொழில்நுட்பத் துறையின் மூலம் மென்பொருள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவு பெற்றதும் நேரம் குறிப்பிட்டு டிக்கெட் வழங்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் பயணிகள் வந்து படகு பயணம் மேற்கொள்ளலாம். மிக குறைந்த காலத்தில் அமல்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Related News