தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குமரி - ஹவுரா எக்ஸ்பிரஸ் 15 மணி நேர தாமதம்: சென்னை பயணிகள் அவதி

 

Advertisement

நெல்லை: கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை, சென்னை வழியாக ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 15 மணி நேரம் தாமதமாக நேற்றிரவு புறப்பட்டுச்சென்றது. இதனால் இந்த ரயிலில் சென்னை செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகள்வெகுநேரம் காத்திருந்து சென்றனர்.

கன்னியாகுமரி - ஹவுரா இடையே (வண்டி எண்: 12666) வாரம் ஒரு முறை சனிக்கிழமை தோறும் அதி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் வழியாக நெல்லைக்கு காலை 8 மணிக்கு வந்து சேரும். பின்னர் நெல்லையில் இருந்து 8.05 மணிக்கு புறப்பட்டு கோவில்பட்டிக்கு 8.53 மணிக்கும், மதுரைக்கு 10.45 மணிக்கும், திருச்சிக்கு நண்பகல் 1.25 மணிக்கும், விழுப்புரத்திற்கு 4.10 மணிக்கும், தாம்பரத்திற்கு மாலை 6.08 மணிக்கும், சென்னை எழும்பூருக்கு இரவு 6.50 மணிக்கும் சென்றடையும். இதனால் வார விடுமுறை நாட்களில் பகல் நேரத்தில் மதுரை, திருச்சி செல்பவர்களும், சென்னை செல்பவர்களும் இந்த ரயிலில் பயணம் செய்வது வழக்கம்.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் இரவு ரயில்களில் டிக்கெட் கிடைக்காத பலரும் ஹவுரா ரயிலில் சென்னை செல்வது வழக்கம். இந்நிலையில் இணை ரயில் தாமதம் காரணமாக நேற்று காலை 5.50 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ஹவுரா எக்ஸ்பிரஸ் 15 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக நேற்று இரவு 9 மணிக்கு தான் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது. இதனால் நெல்லை, கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு முன்பதிவு செய்திருந்த பயணிகள் பலரும் வெகுநேரம் காத்திருந்து புறப்பட்டு சென்றனர்.

Advertisement

Related News