தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குமாரபுரம் அருகே சாலையோரம் கொட்டி எரிக்கப்படும் தனியார் மருத்துவமனை கழிவுகள்

*நோய்கள் பரவும் என பொதுமக்கள் அச்சம்

Advertisement

குமாரபுரம் : குமாரபுரம் அருகே கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈத்தவிளை சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் தனியார் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை பேரூராட்சி ஊழியர்கள் நிர்வாகத்துக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றி வந்து இங்கு கொட்டுகிறார்கள்.

மேலும் தூய்மை பணியாளர்கள் தனியார் மருத்துவமனையில் இருந்து குப்பையுடன் சேகரித்துவரும் ஊசி மருந்து குப்பிகள், மற்றும் பல மருத்துவ கழிவுகளை ஒன்றாக போட்டு எரியூட்டுகிறார்கள். மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து மக்காத குப்பையை மறுசுழற்சி செய்யாமல் எரியூட்டுகிறார்கள்.

கட்டாயமாக குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தும்போது பேரூராட்சி ஊழியர்கள் இப்படி கொட்டி ஏரியூட்டுவதால் அப்பகுதி மக்கள் நோய்வாய்ப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோதநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஏற்கனவே வில்லுக்குறி பேரூராட்சியில் பணிபுரியும் போது ஒரு தனியார் மருத்துவமனை கழிவுகளை கொண்டு வந்து எரியூட்டியதால் சர்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

எனவே, தனியார் மருத்துவ கழிவுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்து எரியூட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் மருத்துவக் கழிவுகளை எரிக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Related News