தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு சாலையில் வழிந்தோடும் சாக்கடை நீர்

*குழாய் பதிக்க அனுமதி வழங்காததால் அவதி

Advertisement

குமாரபாளையம் : கத்தேரி பிரிவு சாலையில் குடியிருப்புகளின் கழிவுநீர் வழிந்தோடுகிறது. சாலையின் குறுக்கே கால்வாய் வெட்டி வெளியேற்றுவதற்கான அனுமதி கொடுப்பதில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குமாரபாளையம் நாற்கர சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையிலிருந்து கத்தேரி கிராமத்திற்கு செல்லும் பிரிவில், அப்பகுதியிலிருந்து வெளியாகும் கழிவுநீர் சாலையின் குறுக்கே வெளியேறுகிறது. இந்த கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க, சிறிய குழி வெட்டி தேக்கியுள்ளனர்.

ஆனால் தற்போதைய மழையால் குழிநிரம்பி கழிவுகள் சாலையை கடக்கிறது. இந்த சாலை வழியாக வந்து செல்லும் வாகனங்கள் கழிவுநீரை கடந்துதான் செல்ல வேண்டும். அதேபோல், நடந்து செல்வோரும் கழிவை மிதித்துத்தான் செல்ல வேண்டும்.

இதுகுறித்து தட்டாங்குட்டை கால்வாய் பாசன சங்க நிர்வாகி ரவி கூறுகையில், ‘சாலையின் குறுக்கே சிறுபாலமோ, அல்லது தற்காலிக குழாய்களோ பதிக்க, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.

ஆனால் அவர்களிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுகளில் கால்களை நனைத்தபடி தான் கத்தேரி கிராமத்திற்குள் செல்ல வேண்டும். எனவே, அதிகாரிகள் தலையிட்டு இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,’ என்றார்.

Advertisement