தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குலசை தசரா திருவிழாவில் வரும் அக்.2ல் சூரசம்ஹாரம்: பலவகையான வேடம் அணிந்த பக்தர்கள் ஆட்டம் பாட்டம்

தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவையொட்டி வரும் அக்.2ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற இருக்கும் நிலையில், பலவகையான வேடம் அணிந்த பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடம் வலம்வர தொடங்கியுள்ளனர். திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 2ம் தேதி இரவு 12 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி குலசேகரப்பட்டினத்தை சுற்றியுள்ள ஊர்களில் தசரா குழுவினரின் ஆட்டம் கலைக்கட்டியுள்ளது.

Advertisement

பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனுக்காக காளி, முருகன், விநாயகர், கிருஷ்ணர், ராமர் உள்ளிட்ட கடவுளின் வேடங்களையும், குரங்கு, கரடி, சிங்கம் போன்ற விலங்குகளின் வேடங்களும், ராஜா, ராணி, குறவன், குறத்தி, பூதம் உள்ளிட்ட வேடங்கள் அணிந்து மேள, தாளங்கள் முழங்க வேடமணிந்த பக்தர்கள் இசைக்கு ஏற்ப நடனமாடி காணிக்கை வசூலில் ஈடுபடுகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழாவில் உள்நாடு மட்டுமின்றி ஏராளமான வெளிநாட்டினர் உள்ளிட்ட 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தென்மாவட்ட மக்களை ஒன்றிணைக்கும் திருவிழாவாக பார்க்கப்படும் இந்த விழாவிற்காக ஆண்டுக்கு ஆண்டு வேடமணிந்து குலசை வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Advertisement

Related News