குளச்சலில் நள்ளிரவு பரபரப்பு: இடைவிடாது ஒலித்த வங்கி அலாரம்
தீயணைப்பு வீரர்கள் ஆய்வு செய்த போது வங்கிக்குள் இருந்து மின்சாதன பொருள் எரிந்த நாற்றம் வந்தது. ஆகவே வங்கிக்குள் ஏதேனும் பொருட்கள் தீப்பற்றி எரிகிறதா? என்று சந்தேகம் அடைந்த வீரர்கள் வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்து விட்டு, பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் ஏதேனும் மின் கசிவு ஏற்பட்டு உள்ளதா? என்று சோதனை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து நடத்திய சோதனையில் எச்சரிக்கை அலாரத்தின் கண்ட்ரோல் பேனலில் இருந்து தீஞ்ச நாற்றம் வந்து உள்ளது.
இதனையடுத்து அங்கு வந்த வங்கி எலெக்ட்ரிசியன் ஆய்வு மேற்கொண்டதில் கண்ட்ரோல் பேனலில் புகுந்த கரப்பான் பூச்சியால் ஏற்பட்ட மின் கசிவால் எச்சரிக்கை அலாரம் தொடர்ந்து ஒலித்தது தெரியவந்தது. உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அலாரம் சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு போலீசார், தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் ஆகியோர் அங்கிருந்து நிம்மதியுடன் திரும்பி சென்றனர். கரப்பான் பூச்சியால் வங்கி அலாரம் இடை விடாது ஒலித்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.