தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடுவாஞ்சேரி அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சுடுகாட்டை மீட்க கோரிக்கை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே குமிழி ஊராட்சியில் குமிழி, ஒத்திவாக்கம், அம்மணம்பாக்கம், மேட்டுப்பாளையம், இடையர்பாளையம், அஸ்தினாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குமிழி ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்திவாக்கத்தில் சர்வே எண் 7-ல் 2 ஏக்கர் 56 சென்ட் நிலம் கொண்ட சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டு நிலத்தை ஒரு தனிநபர் முழுவதுமாக ஆக்கிரமித்து, அங்கு வீடு மற்றும் தோட்டம் அமைத்துள்ளார். மேலும், சுடுகாட்டுக்கு செல்லும் பாதையையும் ஆக்கிரமித்து, அந்த தனிநபர் தற்காலிக தடுப்பு சுவர் கட்டியுள்ளது.
Advertisement

இதனால் அப்பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களை சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு எடுத்து செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட தனிநபர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே, குமிழி ஊராட்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு உரிய சுடுகாட்டு நிலத்தை மீட்டு, சம்பந்தப்பட்ட தனிநபர்மீது மாவட்ட கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement