தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குச்சனூர் கோயில் விழாவில் சோணை கருப்பண்ணசாமிக்கு 2,000 மதுபாட்டில் படையல்

Advertisement

சின்னமனூர்: குச்சனூரில் சோணை கருப்பண்ணசாமிக்கு நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜை நடந்தது. இதில், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மதுபாட்டில்கள் படையலிடப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் 500 ஆண்டு பழமையான சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். ஆனால், இந்தாண்டு கோயிலில் திருப்பணி நடைபெறுவதால் விழாவை நடத்த ஐகோர்ட் மதுரை கிளை அனுமதி மறுத்துள்ளது. மேலும், சனிக்கிழமைகளில் பக்தர்கள் சென்று வழிபடலாம் என உத்தரவிட்டது.

இதன்படி கடந்த 4 வார சனிக்கிழமைகளில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டு சென்றனர். இந்நிலையில், கோயிலின் உபகோயிலான சோனை கருப்பண்ணசாமிக்கு நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் படையலிட்டு பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் வழங்கிய 47 ஆடுகள், 27 கோழிகள் பலியிடப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு அசைவ விருந்து பறிமாறப்பட்டது. நள்ளிரவு வரை நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement