தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோலாலம்பூரில் இருந்து 137 பேருடன் சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை

சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை, 129 பயணிகள், 8 விமான ஊழியர்கள், 137 பேருடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை 10.40 மணிக்கு தரையிறங்க இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில், சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு, ஒரு இ-மெயில் வந்தது.

Advertisement

அதில், கோலாலம்பூரில் இருந்து, சென்னைக்கு வந்து கொண்டு இருக்கும், மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியதும், குண்டுகள் வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று காலை 10.40 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து நின்றது.

உடனடியாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அதிரடி படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்துக்குள் ஏறி, விமானத்தின் அனைத்து பகுதிகளையும் தீவிரமாக பரிசோதித்தனர். ஒன்றும் கிடைக்கவில்லை. குண்டு மிரட்டல் புரளி என ெதரியவந்தது. விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக நேற்று பகல் 12:40 மணிக்கு சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இச் சம்பவம் குறித்து சென்னை மாநகர சைபர் கிரைம் பிராஞ்ச் போலீசார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

 

Advertisement