தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 80,000 கன அடி நீர் திறப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பெங்களூரு: கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 80,000 கன அடி நீர் திறக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வினாடிக்கு 50,000 கன அடி திறக்கப்பட்ட நிலையில், 80,000 கன அடியாக நீர் திறக்கப்படுகிறது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது. ஆற்றில் யாரும் குளிக்கவோ, கால்நடைகளை சுத்தம் செய்யவோ கூடாது என அறிவுறுத்தல் மக்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது 14,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர்வரத்து ஒருலட்சம் கன அடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டனர்.