தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு நீர்திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.
Advertisement

தென்பெண்ணை ஆற்றின் அருகே கிருஷ்ணகிரியில் கே.ஆர்.பி. அணை கட்டப்பட்டுள்ளது. 52 அடி உயரமுள்ள இந்த அணையிலிருந்து ஆண்டு தோறும் இருபோக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது.

அதன்படி இன்று கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் மலர்தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.

கே.ஆர்.பி. அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் இருந்து இன்று முதல் வினாடிக்கு 151 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கே.ஆர்.பி. அணையின் பாசன பகுதிகளான பெரியமுத்தூர், தளி, குண்டலப்பட்டி, காவேரிப்பட்டினம் உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

கே.ஆர்.பி. அணையின் தற்போதைய நீரைமட்டம் மற்றும் நீர்வரத்தை கொண்டு 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement