தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ணா கால்வாய் சேதம்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

 

Advertisement

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, சிட்ரபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாய் கரைகளை அடுத்த தவணை தண்ணீர் திறப்பதற்குள் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில், 3 டிஎம்சி சேதாரம் போக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், கண்டலேறுவில் திறக்கப்பட்ட தண்ணீர் 152 கி.மீட்டர் கடந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு கடந்த மார்ச் மாதம் 28ம்தேதி வந்தடைந்தது.

இந்த, தண்ணீர் கடந்த ஜூன் 30ம்தேதி வரை தமிழகத்திற்கு 1.6 டிஎம்சி கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், இதனைத்தொடர்ந்து, கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்க வேண்டிய 8 டிஎம்சி தண்ணீர், ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கிய, கடந்த செப்டம்பர் 15ம்தேதி வரை 2.50 டிஎம்சி தண்ணீர் வழங்கியுள்ளது. மீதமுள்ள தண்ணீரை அக்டோபர் மாதத்திற்குள் ஆந்திர அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினாடிக்கு 2000 கன அடியாக திறக்கப்பட்டு வந்த தண்ணீர், கடந்த வாரம் 3.8 டிஎம்சியுடன் திடீரென நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஊத்துக்கோட்டை அருகே சிட்ரபாக்கம் பகுதியில் கிருஷ்ணா கால்வாயில் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக தண்ணீர் நிறுத்தப்பட்டதால், கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘கடந்த மார்ச் மாதம் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் தொடர்ந்து 7வது மாதமாக தண்ணீர் வந்ததால் கால்வாய் சேதமடைந்தது. மேலும், தண்ணீர் நிறுத்தப்பட்டதால் அடுத்த தவணை ஜனவரி மாதம் ஆந்திர அரசு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்குவதற்குள் சிட்ரபாக்கம், ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர், தொம்பரம்பேடு ஆகிய பகுதியில் சேதமடைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

Advertisement

Related News