தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோழிக்கோட்டில் இருந்து வந்த சென்னை ஆம்னி பஸ்சில் திடீர் தீ: 23 பயணிகள் தப்பினர்

திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே கோழிக்கோட்டிலிருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்சில் தீப்பிடித்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பஸ்சில் இருந்த 23 பயணிகளும் மயிரிழையில் உயிர் தப்பினர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு ஒரு ஆம்னி பஸ் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது. இந்த பஸ்சில் 4 ஊழியர்கள் மற்றும் 23 பயணிகள் இருந்தனர். இரவு சுமார் 9 மணியளவில் பாலக்காடு அருகே உள்ள திருவாழியோடு ஸ்ரீகிருஷ்ணபுரம் போலீஸ் நிலையத்திற்கு அருகே இந்த பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது டிரைவருக்கு அருகே எஞ்ஜினில் இருந்து லேசாக புகை வந்தது. அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி அனைத்து பயணிகளையும் தட்டி எழுப்பி அவசர அவசரமாக அனைவரையும் பஸ்சில் இருந்து கீழே இறக்கினர். பயணிகள் இறங்கிய சிறிது நேரத்திலேயே பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தங்களின் கண் முன்னே பஸ் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிவதை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களது உடைமைகள் அனைத்தும் பஸ்சுக்குள்ளேயே சிக்கி தீயில் எரிந்து நாசமாயின. சொகுசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related News