தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயம்பேடு ஜெய் பார்க்கில் ஆக்கிரமிப்பு வாகனங்கள் அகற்றம்: உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு ஜெய் பார்க் அருகே தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில், கோயம்பேடு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் எஸ்.பி.சுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். இதன்பின்னர் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

Advertisement

அப்போது வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ‘’இனிமேல் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்தனர். போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘’ஜெய்நகர் பார்க் அருகே சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுசம்பந்தமாக வந்த புகாரையடுத்து சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி உள்ளோம். மீண்டும் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் உடனடியாக போலீசில் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Advertisement