தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 5 சிறப்பு அதிகாரிகள் நியமனம்: அங்காடி நிர்வாகத்துக்கு வியாபாரிகள் நன்றி

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் போக்குவரத்து நெரிசல் குறைக்க ஐந்து சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் தற்போது போக்குவரத்து சிரமமின்றி வியாபாரிகள் நிம்மதியாக உள்ளனர். இதற்காக அங்காடி நிர்வாகத்துக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் உணவு தானிய பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டுவரப்படுகிறது. இதுதவிர தமிழகம் முழுவதும் இருந்தும் லாரிகளில் பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. இதன்காரணமாக கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்.

இதுசம்பந்தமாக வியாபாரிகள் கொடுத்த புகாரின்படி, அங்காடி நிர்வாக சிறப்பு அதிகாரிகள் பாண்டியன், அமுதா சுகந்தி பாலா, காமாட்சி நங்கையர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சுழற்சிமுறையில் பணியாற்றி வருகின்றனர்.

‘’சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதால் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் தடுக்கப்பட்டு வாகனங்கள் சிரமமின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

வியாபாரிகள் கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தினமும் அதிகாலையில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். தற்போது அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி உத்தரவின்படி, மார்க்கெட்டில் வளாகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த 5 சிறப்பு அதிகாரிகள் நியமித்துள்ளனர். இதனால் வாகனங்கள் சிரமமின்றி சென்று வருகிறது. எனவே, அங்காடி நிர்வாக முதன்மை அலுவலருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றனர்.

Advertisement

Related News