தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயம்பேடு மார்க்கெட்டில்தக்காளி கிலோ ரூ.60க்கு எகிறியது: ரூ.25லிருந்து கிடுகிடு உயர்வு

சென்னை: மழை விட்டுவிட்டு பெய்வதால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவேன அதிகரித்து ரூ.25லிருந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 60 வாகனங்களில் இருந்து 1,300 டன் தக்காளி வருவது வழக்கம்.
Advertisement

இந்நிலையில் சென்ற வாரம் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்தது. நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 35 வாகனங்களில் இருந்து 900 டன் தக்காளி மட்டுமே வந்ததால் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.25 இருந்து ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.35லிருந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ‘மழைவிட்டுவிட்டு பெய்து வருவதாலும் தக்காளி வரத்து குறைந்ததாலும் விலை தற்போது உயர்ந்துள்ளது. மழை மீண்டும் விட்டுவிட்டு பெய்து வந்தால் தக்காளியின் விலை மேலும் உயரும். மழை நின்றால் மீண்டும் தக்காளியின் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது’ என கூறினார்.

Advertisement

Related News