தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் கால்வாய் பள்ளத்தால் காயம் அடையும் பொதுமக்கள்

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே மழைநீர் கால்வாய் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் செல்லும்போது பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து விடுகின்றனர். மேலும் கால்வாய் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் குப்பைகள் நிரம்பி கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை கடித்து வருகிறது. மேலும் கழிவுநீர் தேங்கிய இடத்தில் தள்ளுவண்டி கடைகளில் சாப்பாடு வியாபாரம் செய்து வருவதால் அவற்ைற வாங்கி சாப்பிடுகின்றவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வியாபாரிகள் பலமுறை புகார் அளித்துள்ளனர். இருப்பினும் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

Advertisement

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது;

கோயம்பேடு மார்க்கெட் அருகே மழைநீர் கால்வாய் பள்ளத்தில் கழிவுநீர் முழுவதுமாக நிரம்பியுள்ளதுடன் அதில் குப்பை குவிந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் டிபன், சாப்பாடு வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு பிரச்னை ஏற்படுகிறது. இதுசம்பந்தமாக அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதியிடம் புகார் தெரிவித்ததும் தள்ளுவண்டி கடை வியாபாரிகளை அழைத்து எச்சரிக்கை விடுத்தார். தற்போது மீண்டும் அதே பகுதியில் தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். எனவே, இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement

Related News